விரைவுச் செய்திகள்: ஊரடங்கு நீட்டிப்பு? |  நாங்கள் தேடும்பொறிதான் - கூகுள்

விரைவுச் செய்திகள்: ஊரடங்கு நீட்டிப்பு? | நாங்கள் தேடும்பொறிதான் - கூகுள்

விரைவுச் செய்திகள்: ஊரடங்கு நீட்டிப்பு? | நாங்கள் தேடும்பொறிதான் - கூகுள்
Published on

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொழில்துறையின் கீழ் இயங்கும் டிட்கோ மூலம் தொழில் தொடங்க முன்வருவோருக்கு உதவி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அத்தியாவசிய கடைகள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

+2 பொதுத்தேர்வு ரத்தா? - ஓரிரு நாளில் முடிவு: தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

குஜராத், ம.பி.யில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக குஜராத், மத்தியப்பிரதேச மாநில அரசுகள் அறிவித்துள்ளன. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாநில அரசுகளும் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்?: சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வை ரத்து செய்த மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யுமா? என கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்ஜாமீன் கோரினார் முன்னாள் அமைச்சர்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில் காவல்துறை தேடும் நிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3 பாஜக எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர்கள் அமர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நியமனம் செல்லும் என்று கூறி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப் பலன்: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 497 கோடி ரூபாய் ஓய்வூதிய பலன்களை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலைகளை 6 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கோயில்களில் தீ விபத்தை தடுக்கக்கோரி முறையீடு: தமிழகத்திலுள்ள பழமையான கோயில்களில் தீ விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.

தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படவில்லை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  விளக்கமளித்துள்ளார். கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருவதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார்.

மதுரையில் முன்பதிவு மூலம் தடுப்பூசி: மதுரையில் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து தடுப்பூசி போடும் முறை அமலானது. தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1,742 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,742 குழந்தைகள் பெற்றோரை இழந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாங்கள் சமூகவலைதளம் அல்ல; தேடுபொறிதான்: நாங்கள் சமூக வலைதளம் இல்லை; வெறும் தேடுபொறிதான் என்பதால் புதிய விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூகுள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com