விரைவுச் செய்திகள்: 30 லட்சம் ஸ்புட்னிக் வி வருகை | முதியோரின் உதவியாளர்களுக்கும் இ பதிவு

விரைவுச் செய்திகள்: 30 லட்சம் ஸ்புட்னிக் வி வருகை | முதியோரின் உதவியாளர்களுக்கும் இ பதிவு
விரைவுச் செய்திகள்: 30 லட்சம் ஸ்புட்னிக் வி வருகை | முதியோரின் உதவியாளர்களுக்கும் இ பதிவு

தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இன்று மாலை 4 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் வருகை: ரஷ்யாவிலிருந்து மேலும் 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியா வந்தன. ஐதராபாத் விமான நிலையம் வந்த மருந்துகள் 90 நிமிடத்திற்குள் பிரித்து அனுப்பப்பட்டன.

கொரோனா சிகிச்சை - புதிய விதிமுறைகள்: கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் ஆக்சிஜன் அளவு 94க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க தேவையில்லை என சிகிச்சை தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக மருத்துவத்துறை கூறியுள்ளது.

சிபிஎஸ்இ +2 தேர்வு - பிரதமர் ஆலோசனை: சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சற்று நேரத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார். ஓரிரு நாளில் முடிவை அறிவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்த நிலையில் இந்த அவசர கூட்டம் நடைபெறுகிறது.

சிபிஎஸ்இ அறிவிப்புக்குப் பிறகே தமிழகத்தில் முடிவு: சிபிஎஸ்இ தேர்வு அறிவிப்புக்குப் பிறகே தமிழகத்தில் +2 தேர்வுத் தேதி குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தியபிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதியோரின் உதவியாளர்களுக்கும் இ பதிவு: தமிழகத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் இ பதிவு நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பாளர்கள், தன்னார்வலர்களும் பதிவு செய்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன் - அறிக்கை தர உத்தரவு: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நலன் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜகோபாலனுக்கு 3 நாள் போலீஸ் காவல்: சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.

தென் மாநிலங்களில் வழக்கமான மழைப்பொழிவு: தென்மேற்கு பருவமழையால் தென் மாநிலங்களில் வழக்கமான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com