விரைவுச் செய்திகள்: அதிகரிக்கும் தடுப்பூசி ஆர்வம் | ஊரடங்கு தளர்வு? | பொருளாதார பாதிப்பு

விரைவுச் செய்திகள்: அதிகரிக்கும் தடுப்பூசி ஆர்வம் | ஊரடங்கு தளர்வு? | பொருளாதார பாதிப்பு
விரைவுச் செய்திகள்: அதிகரிக்கும் தடுப்பூசி ஆர்வம் | ஊரடங்கு தளர்வு? | பொருளாதார பாதிப்பு

கொரோனா நிவாரணப்பணிகளுக்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா நிதி உதவி வழங்கினர். அதன்பிறகு அளித்த பேட்டியில் 7 பேர் விடுதலையில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக சீமான் தெரிவித்தார்.

ஊரடங்கு தளர்வுகள் குறித்து ஆலோசனை: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகள் வழங்கலாமா என்றும் ஆலோசித்துவருகிறார்.

தனியார் பள்ளி முதல்வர், தாளாளரிடம் விசாரணை: பாலியல் புகார் தொடர்பாக தனியார் பள்ளி முதல்வர், தாளாளர் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன் ஆஜராகியுள்ளனர். ஆசிரியர் ராஜகோபலன் மீதான புகார்கள் குறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

+2 தேர்வு - இன்று முக்கிய ஆலோசனை: ப்ளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக பெற்றோர், கல்வியாளர்களிடம் இன்றும் கருத்து கேட்கப்பட்டு அந்த அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட முடிவை தமிழ்நாடு அரசு அறிவிக்க உள்ளது.

45+ வயதினரிடம் அதிகரிக்கும் தடுப்பூசி ஆர்வம்: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள 45 வயதிற்கு மேற்பட்டோரிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கோவையில் அனைவருக்கும் தடுப்பூசி போட வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிக கட்டணம் - கொரோனா சிகிச்சை உரிமம் ரத்து: கோவையில் நோயாளியிடம் அதிக கட்டணம் வசூலித்த புகாரில் தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2-வது அலையில் பொருளாதார பாதிப்பு குறைவு: கொரோனா இரண்டாவது அலையில் பொருளாதார பாதிப்பு முதல் அலை போல் அதிகமாக இருக்காது; பாதிப்பு குறையும் வரை ஆதரவான நிலைப்பாடு தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார்.

இவ்வாண்டு முதல் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்: தமிழகத்தில் இவ்வாண்டு முதல் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் ஒதுக்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிப்பு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கெபிராஜ் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீது மாணவி அளித்த பாலியல் புகாரில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்க: கொரோனா பேரிடர் காலத்தில் தடையின்றி குடிநீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என சேலத்தைச் சேர்ந்த கிராம மக்கள் எழுதிய கடிதம் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்த மாணவர்கள் மயக்கம்: கடலூரில் கள்ளச்சாாரயம் குடித்து 3 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே நாளில் 2,713 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 7 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்திருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. 24 மணிநேரத்தில் 2ஆயிரத்து 713 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு மாதத்தில் ரூ. 4 வரை உயர்ந்த பெட்ரோல், டீசல்: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு மாதத்தில் லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்தியாவுக்கு தடுப்பூசி - அமெரிக்கா அறிவிப்பு: இந்தியாவுக்கு தடுப்பூசி வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது. இதுகுறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசி வாக்குறுதி அளித்தார்.

மோசமான மொழி கன்னடமா?- மன்னிப்பு கேட்ட கூகுள்: இந்தியாவின் மோசமான மொழி என கன்னட மொழியை குறிப்பிட்ட விவகாரத்தில் மக்களிடம் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com