"தமிழ்க்கல்வி இன்னும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்" - தமிழிசை சவுந்தரராஜன்

"தமிழ்க்கல்வி இன்னும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்" - தமிழிசை சவுந்தரராஜன்

"தமிழ்க்கல்வி இன்னும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்" - தமிழிசை சவுந்தரராஜன்
Published on

தமிழ்க்கல்வி இன்னும் ஊக்கப்படுத்தபட வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் மொழி இன்னும் போற்றப்பட வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். கம்பர் உள்ளிட்ட தமிழ்மொழியின் பெரும் ஆளுமைகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார். உக்ரைனில் சிக்கியிருந்த மாணவர்கள் மாநில பாகுபாடின்றி மீட்கப்பட்டதாகவும், அனைவரும் இந்தியர்களே என்ற அடிப்படையில்தான் அவர்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com