'சோதனை நடத்த வந்தாலே சிலருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது' - தமிழிசை சௌந்தரராஜன் சாடல்

சோதனை என்று வந்தாலே சிலருக்கு நெஞ்சுவலி வந்துவிடுவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

கம்பன் கழகம் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் 40-வது ஆண்டு கம்பன் விழாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பிற மொழிகளால் தமிழ் மொழியை அழிக்க முடியாது என்றும் தமிழால்தான் பிற மொழிகள் வாழும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார். சோதனை நடத்த வந்தாலே சிலருக்கு நெஞ்சுவலி வந்து விடுவதாக மறைமுகமாக விமர்சித்திருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், நாட்டை ஆள வேண்டும் என்றாலும் காட்டை ஆள வேண்டும் என்றாலும் ராமர் ஒரே நிலையில் இருந்ததாக தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com