“ஆளாளுக்கு அரசியல் பேசும்போது, ஏன் ஆளுநர் பேசக்கூடாது?”- அண்ணாமலைக்கு தமிழிசை பதில்

ஆளுநர்கள் அரசியல் பேசக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு, ஆளுநர்கள் அரசியல் பேசலாம் என தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழ்நாடு அரசும் என்ற தலைப்பில் தனியாக கட்டுரையே எழுதலாம் எனுமளவு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசு இரண்டு தரப்பினருக்குமான கருத்து வேறுபாடுகள் என்பது தொடர்ந்து அரசியல் களத்தில் இருந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஆளுநர் அரசியல் பேசலாமா என்ற கேள்விக்கு பதிலளித்திருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆளுநர் அரசியல் பேசக் கூடாது, அவருடைய கடமையை மட்டுமே செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

அண்ணாமலையின் இந்த பதிலை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், “ ஆளாளுக்கு அரசியல் பேசும்போது ஆளுநர் ஏன் அரசியல் பேசக் கூடாது, ஆளுநர் அரசியல் பேசலாம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com