மாட்டிறைச்சி தடை சட்டத்தை விமர்சிப்பதா?: ஏ.கே.அந்தோனிக்கு தமிழிசை கண்டனம்

மாட்டிறைச்சி தடை சட்டத்தை விமர்சிப்பதா?: ஏ.கே.அந்தோனிக்கு தமிழிசை கண்டனம்

மாட்டிறைச்சி தடை சட்டத்தை விமர்சிப்பதா?: ஏ.கே.அந்தோனிக்கு தமிழிசை கண்டனம்
Published on

மாட்டிறைச்சி தடை சட்டத்தை விமர்சிப்பதா? என்று கேரள முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “மத்திய அரசு மிகவும் வரைமுறைப்படுத்தி மாட்டிறைச்சி தடை சட்டத்தை அறிவித்துள்ளது. இது மதசார்பற்ற பிரச்னை.  இதனை அரசியல்வாதிகள் தேவையின்றி விமர்சித்து வருகின்றனர்” என்றார்.

மேலும், “கேரளாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இந்தப் பிரச்னையில் மத்திய அரசை குறை கூறியுள்ளார். அரசின் ஆணையை கிழித்தெறிவோம் என்றும் தெரிவித்துள்ளார். நதிநீர் இணைப்பு திட்டத்தில் இருந்து கேரளா ஒரு சொட்டு தண்ணீர் கூட தரவில்லை. அங்கு மனிதர்களை தான் காவு கொடுக்கிறார்கள். அவர்கள் இதுபற்றி பேச தகுதி இல்லை. ஜி.எஸ்.டி. தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதனை பதிவு செய்யலாம். ஐ.டி. ஊழியர்கள் பணி இழக்கப்படுவது குறித்து கலந்தாலோசித்து வருகிறோம். அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பேசி வருகிறோம். நடிகர் ரஜினி படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார். ஆனால் அமித் ஷாவை பார்க்க செல்கிறாரா என கேட்கிறீர்கள். முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும். தற்போது அவர் தனது தொழிலை பார்க்கட்டும். அவரது திரைப்படங்களை விட, ரஜினி பற்றி தற்போது பேசி வருவது சுவாரஸ்யமாக உள்ளது” என்று தமிழிசை கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com