பஞ்சாபில் கால்வாயில் விழுந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்! #Video

பஞ்சாப்பில் கால்வாயில் விழுந்த மாணவியின் உயிரைக் காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனுக்கு ராணுவ தலைமைத் தளபதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ராணுவ மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜூன் 16ஆம் தேதி பாட்டியாலாவிலிருந்து சங்கரூருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பக்ரா கால்வாயில் ஒரு பெண் தவறி விழுந்து நீரில் மூழ்கி கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது அங்கிருந்த யாரும் காப்பாற்ற முன்வராத நிலையில், வேகமாக தண்ணீர் ஓடும் கால்வாயில் குதித்த ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக நீரில் மூழ்கிய பெண்ணைக் காப்பாற்றினார். இவரது தன்னலமற்ற செயலை ராணுவ தலைமை தளபதி நேரில் பாராட்டினார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின், “இன்னல் நேரும் தருணத்தில் தன்னுயிர் பாராமல் பஞ்சாப் மாணவியின் உயிரைக் காப்பாற்றிய ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com