திறக்கப்படும் வழிபாட்டு தலங்கள் : வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

திறக்கப்படும் வழிபாட்டு தலங்கள் : வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
திறக்கப்படும் வழிபாட்டு தலங்கள் : வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் நிலையில் அவற்றுக்கான வழிபாட்டு முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் நாளைமுதல் திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியீடுடப்பட்டுள்ளது. அதன்படி,
அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தனித்தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன. வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்லும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்குள் உள்ளவர்களை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் திருமணம், இறுதிச்சடங்குகளுக்கான முந்தைய கட்டுப்பாடுகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கும், இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கும் அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com