பொங்கல் சிறப்பு பேருந்தில் இதுவரை 2 லட்சத்து 93 ஆயிரம் பேர் பயணம்

பொங்கல் சிறப்பு பேருந்தில் இதுவரை 2 லட்சத்து 93 ஆயிரம் பேர் பயணம்
பொங்கல் சிறப்பு பேருந்தில் இதுவரை 2 லட்சத்து 93 ஆயிரம் பேர் பயணம்

போக்குவரத்துத் துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் இதுவரை 2 லட்சத்து 93 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 11 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 3-வது நாளான இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை 11.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளில் 814 பேருந்துகளும், 227 சிறப்பு பேருந்துகளும் என கடந்த 11.01.2022 முதல் 13.01.2022 காலை 11.00 மணி வரை மொத்தம் 7,156 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதில், 2,93,571 பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இதுவரை 86,946 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாகவும் தெரிவித்தள்ளனர். இதில், மதுரை, கோவை, சேலம் மண்டலம் மற்றும் தென் மாவட்டத்துக்கு செல்லும் பயணிகள் அதிகளவு பயணம் செய்ததாகவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com