தமிழக லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் நியமனம்

தமிழக லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் நியமனம்

தமிழக லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் நியமனம்

தமிழ‌கத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக லோக் ஆயுக்தா தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு‌பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதிகள், கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஓய்வற்ற ஐஏஸ் அதிகாரி, எம்.ராஜாராம், மூத்த வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபடும்போது அவர்களை விசாரிக்கும் அமைப்பான லோக் ஆயுக்தாவிற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு கடந்த மார்ச் 13ஆம் தேதி உறுப்பினர்களை தேர்வு செய்தது. தேர்தல் ந‌டத்தை அமலில் இருப்பதால், அதற்கு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. தற்போது தேர்தல் ஆணையம், லோக் ஆயுக்தா அமைப்புக்கான உறுப்பினர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com