தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்

தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்
தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்

தமிழ்நாடு அரசின் தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷீலா பிரியா 2017 டிசம்பர் 8-ம் தேதி பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலம் 2019 மே மாதம் முடிவடைந்தது. காலியாக இருந்த தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனக் கடந்த ஜூலை மாதம் அரசு அறிவித்தது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் தேடுதல் குழு புதிய தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் பணிகளை மேற்கொண்டது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆளுநரின் புதிய செயலராக ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு தகவல் தலைமை ஆணையராக இருப்பர் ராஜகோபால்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com