முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டில் மருத்துவமனைகள் முறைகேடு: தமிழக அரசு

முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டில் மருத்துவமனைகள் முறைகேடு: தமிழக அரசு

முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டில் மருத்துவமனைகள் முறைகேடு: தமிழக அரசு
Published on

முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டில் 346 மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரமேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழக அரசு இந்த பதிலை தெரிவித்திருக்கிறது. முறைகேட்டில் ஈடுபட்ட 16 மருத்துவமனைகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் 117 மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதிய தலைமுறைக்கு பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காப்பீடு திட்டத்தை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இந்த ஆண்டு தொடங்கும் போது அது மேலும் மேம்படுத்தப்படும் என்றும் தவறு செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் விளக்கம் அளித்தார்.

முன்னதாக முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் சில மருத்துவமனைகள் கட்டணம் வசூலிப்பதாகவும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை என்று மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றக் கிளையில் புகார் மனுதாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com