காவல்துறையைச் சேர்ந்த 45 உயரதிகாரிகள் ஒரேநாளில் பணியிடமாற்றம் - தமிழக அரசு

காவல்துறையைச் சேர்ந்த 45 உயரதிகாரிகள் ஒரேநாளில் பணியிடமாற்றம் - தமிழக அரசு
காவல்துறையைச் சேர்ந்த 45 உயரதிகாரிகள் ஒரேநாளில் பணியிடமாற்றம் - தமிழக அரசு

தமிழகத்தில் காவல்துறையைச் சேர்ந்த 45 உயரதிகாரிகள் ஒரேநாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 27 பேருக்கு பதவி உயர்வு
வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக மோகன்ராஜ் நியமிக்கப்படுவதாகவும்
அப்பதவியிலிருந்த பகலவனுக்கு, காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர்
எஸ்.பி.யாக ஷ்யாமளா தேவியும் விருதுநகர் எஸ்.பி.யாக ஸ்ரீநிவாச பெருமாளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகர காவல் ஆணையராக ராஜேந்திரன், திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன்குமார் அபிநபு, மதுரை மாநகர காவல் ஆணையராக
நரேந்திரன் நாயர், திருச்சி மாநகர காவல் ஆணையராக சத்யப்ரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி காவல் ஆணையராக இருந்த கார்த்திகேயன், திருச்சியை தலைமையிடமாக கொண்ட மத்திய மண்டல ஐ.ஜி.யாக
நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com