தமிழ்நாடு: மாவட்டங்கள் 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு - முழு விவரம்

தமிழ்நாடு: மாவட்டங்கள் 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு - முழு விவரம்
தமிழ்நாடு: மாவட்டங்கள் 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு - முழு விவரம்

நாளை முதல் ஜூன் 28 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த முழு விபரம்..

மாவட்டங்களில் உள்ள நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் வகை 1, வகை 2, வகை 3 என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

வகை - 1 (11 மாவட்டங்கள்)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.

வகை - 2 (23 மாவட்டங்கள்)

அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர்

வகை - 3 (4 மாவட்டங்கள்)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் வகை ஒன்றில் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

மேலும் வகை 2-இல் உள்ள 23 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேர தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

*தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* காய்கறிகள் பழங்கள் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். 

* மின்வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இதரமின் வணிக  சேவை நிறுவனங்கள் அனைத்தும் இரவு 9 மணி வரை இயங்கலாம்.

* இனிப்பு மற்றும் கார வகை விற்பனை செய்யும் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* சார்பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்.

* அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

* இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* மின் பொருள்கள், கேபிள்கள் சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும்.

* ஹார்டுவேர் காடைகள் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரை செயல்படும் அனுமதிக்கப்படும்.

* கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* செல்பேசி மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்து வகையான கட்டுமான பணிகளும் அனுமதிக்கப்படும்.

* பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் அனுமதிக்கப்படும்.

* காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும் பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டி நடத்தவும் அனுமதிக்கப்படும்.

* திரையரங்குகளில் தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டாக்ஸிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மேலும் வகை 3-இல் உள்ள நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

*தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* காய்கறிகள் பழங்கள் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். 

* மின்வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இதரமின் வணிக  சேவை நிறுவனங்கள் அனைத்தும் இரவு 9 மணி வரை இயங்கலாம்.

* இனிப்பு மற்றும் கார வகை விற்பனை செய்யும் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* சார்பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்.

* அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

* இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* மின் பொருள்கள், கேபிள்கள் சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மாலை 7 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும்.

* ஹார்டுவேர் காடைகள் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை வரை செயல்படும் அனுமதிக்கப்படும்.

* கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* செல்பேசி மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்து வகையான கட்டுமான பணிகளும் அனுமதிக்கப்படும்.

* பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் அனுமதிக்கப்படும்.

* காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும் பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டி நடத்தவும் அனுமதிக்கப்படும்.

* திரையரங்குகளில் தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டாக்ஸிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

* சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை அனுமதிக்கப்படும்.

கணினி வன்பொருள்கள், மென்பொருட்கள், மின்னணு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* டீக்கடைகளில் மாலை 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். 

* அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதி இல்லாமலும் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணி புரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும். படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியாளர்கள்/கலைஞர்கள் அவசியம் பரிசோதனை மேற்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

* படப்பிடிப்புக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும்

* மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமலும் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மெட்ரோ ரயில் போக்குவரத்து 50% இருக்கைககளில் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இடையே பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமலும் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* திருமண நிகழ்வுக்கு வகை 2 மற்றும் 3ல் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com