தன்னம்பிக்கை பெண் ப்ரித்திக்கு தமிழக அரசின் விருது

தன்னம்பிக்கை பெண் ப்ரித்திக்கு தமிழக அரசின் விருது
தன்னம்பிக்கை பெண் ப்ரித்திக்கு தமிழக அரசின் விருது

விபத்து ஒன்றில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நகர்த்தி வரும் ப்ரித்திக்கு துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

முதுகு முடங்கியதால் வாழ்க்கையே முடங்கியதாக கருதிவிடாமல் தண்டு வடம் பாதித்தோர் நலனுக்காக சோல் ஃப்ரீ என்ற அறக்கட்டளையை இவர் நடத்தி வருகிறார்.

தமிழக பெண்கள் இளையோர் கிரிக்கெட் அணி கேப்டனாகவும் இவர் இருந்துள்ளார். சிறந்த பெண்களுக்கு புதிய தலைமுறை வழங்கும் சக்தி விருதையும் பெற்றவர் இன்று தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற்றிருக்கும் இந்த இளம்பெண் ப்ரித்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com