கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழக பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - மீனவ சங்கத்தினர் கோரிக்கை

கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழக பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - மீனவ சங்கத்தினர் கோரிக்கை
கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழக பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - மீனவ சங்கத்தினர் கோரிக்கை

கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழக பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென ராமநாதபுரம் நாட்டுப் படகு மீனவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கச்சதீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலய திருவிழா வரும் மார்ச் 11-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. தற்போது இலங்கையில் கொரோனா நோய் தொற்று அதிகரித்திருப்பதால், குறைவான பக்தர்களே அதில் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பக்தர்கள் வருவதற்கு அனுமதி இல்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்கத்தின் சார்பில் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அரசிடம் அனுமதி பெற்று தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 200 பேராவது பங்கேற்க அனுமதி பெற வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com