நிவர் புயலின் பாதிப்புகளை ஆய்வு செய்ய கடலூர் செல்லும் முதலமைச்சர்!

நிவர் புயலின் பாதிப்புகளை ஆய்வு செய்ய கடலூர் செல்லும் முதலமைச்சர்!

நிவர் புயலின் பாதிப்புகளை ஆய்வு செய்ய கடலூர் செல்லும் முதலமைச்சர்!
Published on

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய இன்று பிற்பகல் 2.30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி, கடலூர் செல்கிறார்.

'நிவர்' புயலானது நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதிதீவிர புயலாக நகர்ந்து வந்த நிவர் தீவிரப் புயலாக வலுவிழந்து கரையை கடந்தது. இதனால் புதுச்சேரி, கடலூர் பகுதிகளின் பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன.

(கோப்புப்படம்)

மேலும், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய இன்று பிற்பகல் 2.30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடலூர் செல்கிறார். நேற்று செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்ட நிலையில் இன்று கடலூர் சென்று புயல் சேதங்களை பார்வையிட உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com