சென்னை தலைமைச் செயலகத்தில் வறட்சி நிவாரணத் தொகையை, 31 மாவட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
வறட்சி காரணமாக, 30 லட்சம் விவசாயிகளின் 50,35,127 ஏக்கர் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. பாதிக்கப்பட்ட நெற்பயிர், ஏக்கருக்கு ரூ.5000, நீண்ட காலப்பயிருக்கு ரூ.7000 என நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மேலும் 1,083 மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.