”ஊழல் ஒழிப்பை நெஞ்சில் சுமந்தவர்”-நல்லம நாயுடு உடலுக்கு நேரில் மரியாதை செய்த மு.க.ஸ்டாலின்

”ஊழல் ஒழிப்பை நெஞ்சில் சுமந்தவர்”-நல்லம நாயுடு உடலுக்கு நேரில் மரியாதை செய்த மு.க.ஸ்டாலின்
”ஊழல் ஒழிப்பை நெஞ்சில் சுமந்தவர்”-நல்லம நாயுடு உடலுக்கு நேரில் மரியாதை செய்த மு.க.ஸ்டாலின்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை அதிகாரியாக இருந்த 83 வயதான நல்லம நாயுடு, இன்று காலை வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், “ஊழல் ஒழிப்பைத் தனது நெஞ்சில் சுமந்து - நேர்மையோடும் துணிச்சலோடும் எவ்வித அச்சுறுத்துலுக்கும் அஞ்சாது நியாயத்தை நிலைநாட்டிய காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடுவின் மறைவு பேரிழப்பாகும். அன்னாருக்கு நேரில் இறுதி மரியாதை செலுத்தி அவர் குடும்பத்துக்கு எனது ஆறுதலைத் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நல்லம நாயுடு, கடந்த 1997 முதல் 2015ஆம் ஆண்டு வரை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மை விசாரணை அதிகாரியாக பணியாற்றியிருந்தார். மேலும் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் செயலாற்றியவர் இவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com