75-வது சுதந்திர தின நாளை நினைவுகூரும் வகையில் எழுப்பப்பட்டுள்ள மிகப்பெரிய தூண் வெறும் கல்லாலும் மண்ணாலும் உருவானதல்ல, சுதந்திரத்திற்காக போராடியவர்களின் ரத்தத்தாலும் சதையாலும் எழுப்பப்பட்ட தூண். வேலுநாச்சியார், கட்டபொம்மன், தில்லையாடி வள்ளியம்மை, பெரியார் போன்ற ஏராளமான தியாகிகளின் மூச்சுக்காற்றால் கட்டப்பட்டது நினைவுத்தூண். விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்.