\
தமிழகத்தில் வங்கி சேவை நேரம் குறைப்பு!

தமிழகத்தில் வங்கி சேவை நேரம் குறைப்பு!

தமிழகத்தில் வங்கி சேவை நேரம் குறைப்பு!
Published on

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் நாளை முதல் பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com