தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 75,064 வாக்குச்சாவடிகள் அமைப்பு... இதில், 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை... வாக்குப்பதிவையொட்டி தமிழகத்தில் ஒன்றரை லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 23 ஆயிரம் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிக்குள் செல்போனுக்கு அனுமதியில்லை எனவும் அறிவிப்பு...
சட்டமன்றத் தேர்தலில் 5 கோடியே 73 லட்சம் பேர் வாக்களிக்க ஏற்பாடு... 18 வயது முதல் 40 வயதுக்குள் சுமார் இரண்டரை கோடி பேர் உள்ளதாலும், தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதாலும் எகிறும் எதிர்பார்ப்பு.