தமிழ்நாடு: 2 ஐஜிகள் உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு: 2 ஐஜிகள் உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு: 2 ஐஜிகள் உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 2 ஐ.ஜிகள் மற்றும் 5 எஸ்.பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 6-வது பட்டாலியன் கமாண்டெண்ட்டாக மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை ரயில்வே எஸ்பியாக இருந்த தீபா சத்யன், ராணிப்பேட்டை எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டெண்ட்டாக இருந்த இளங்கோ, சென்னை ரயில்வே எஸ்பி-யாக பணியிட மாற்றம் செய்துள்ளனர். ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி-யாக இருந்த ஜெயந்தி, சேலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். சேலம் மண்டல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி மகேஷ்குமார், நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்துள்ளனர்.

பொருளாதார குற்றப்பிரிவு 2-வது பிரிவின் ஐஜியாக இருந்த கல்பனா நாயக், சென்னை ரயில்வே ஐஜியாகவும், ஐஜி அபின் தினேஷ் மொடக், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com