உரிமைக்குழு நோட்டீஸ்: 15 நாட்கள் அவகாசம் கேட்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடிதம்

உரிமைக்குழு நோட்டீஸ்: 15 நாட்கள் அவகாசம் கேட்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடிதம்

உரிமைக்குழு நோட்டீஸ்: 15 நாட்கள் அவகாசம் கேட்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடிதம்
Published on

சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு வந்தது பற்றி விளக்கம் கேட்டு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க திமுக எம்.எல்.ஏக்கள் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு வந்து காண்பித்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக திமுக கொறடா சக்கரபாணி தலைமையில் அந்த கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் அளித்தனர். 

அந்த கடிதத்தில் உரிமைக்குழுவின் நோட்டீஸுக்கு சட்டப்படி ஆலோசித்து பதிலளிக்க திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்க கோரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com