வெளியானது பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற 11 ஆம் வகுப்பு மாணாக்கருக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிஅளவில் வெளியாகியுள்ளது.
ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள்
ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள்முகநூல்

ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற 11 ஆம் வகுப்பு மாணாக்கருக்கு, கடந்த மார்ச் 4 முதல் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 25 ஆயிரத்து 187 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்களாக 4 ஆயிரத்து 945 பேரும் சிறைவாசிகள் 187 பேரும் தேர்வெழுதினர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரத்து 852 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வெழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுமென அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள்
தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் 36,137 இளம்வயது சிறுமிகள் கர்ப்பம்.. RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in என்ற இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது அளித்த அலைபேசி எண்களுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com