\
கூவத்தூரில் அதிரடிப்படை நுழைந்தது

கூவத்தூரில் அதிரடிப்படை நுழைந்தது

கூவத்தூரில் அதிரடிப்படை நுழைந்தது
Published on

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து கூவத்தூரில் சசிகலா மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் நட்சத்திர விடுதிக்குள் அதிரடிப்படை போலீசார் புகுந்தனர்.

பரபரப்பான அரசியல் சூழலில் சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் அனைவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் உடனடியாக சரணடையவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னையை அடுத்த கூவத்தூரில் சசிகலா மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த தனியார் நட்சத்திர விடுதிக்கு 200க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com