மைசூரில் தமிழ் கல்வெட்டுகள் பாதுகாப்பாக உள்ளதா? ஆய்வு செய்ய 5 பேர் குழு: நீதிமன்றம்

மைசூரில் தமிழ் கல்வெட்டுகள் பாதுகாப்பாக உள்ளதா? ஆய்வு செய்ய 5 பேர் குழு: நீதிமன்றம்
மைசூரில் தமிழ் கல்வெட்டுகள் பாதுகாப்பாக உள்ளதா? ஆய்வு செய்ய 5 பேர் குழு: நீதிமன்றம்

மைசூரில் உள்ள கல்வெட்டியல் மையத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், அவற்றின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த இளஞ்செழியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், " இந்தியாவில் கண்டறியப்படும் தொல்லியல் சின்னங்கள், மற்றும் பழமையான கல்வெட்டுகள், படிமங்கள், தொன்மையான எழுத்துகள் அனைத்தும் மத்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் அராபிக் மற்றும் பெர்சியன் கலாசார சின்னங்கள் நாக்பூரில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சமஸ்கிருதம் மற்றும் திராவிட பாரம்பரிய சின்னங்கள், மைசூரிலுள்ள மையத்திலும் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறாம் நூற்றாண்டிலிருந்து கண்டறியப்பட்ட தொன்மையான சின்னங்கள் கல்வெட்டுகள், தமிழ் படிமங்கள், போன்றவை தற்போது மைசூரில் வைக்கப்பட்டுள்ளன. தமிழக பகுதியில் இருந்து திராவிட நாகரிகத்தை வெளிப்படுத்தும் இந்த அரிய வகை பொருட்கள் ஏற்கெனவே ஊட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது இவை அனைத்தும் கர்நாடக மாநிலம் மைசூருக்கு மாற்றப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. நமது பழங்கால தொன்மையான நாகரீகத்தை அறிந்து கொள்ள உதவும் இந்த அரிய வகைப் பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் வைக்கப்படும்போது முறையாக பராமரிக்கப்படாமல் அவை சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே இவற்றை தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்திற்கு மாற்றி, பராமரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில்," மைசூரில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் அனைத்தும் முறையாக, பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன"என தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள்," முனைவர்கள் ராஜவேலு, சாந்தலிங்கம், மார்க்சிய காந்தி, பத்மாவதி மற்றும் தமிழக தொல்லியல் துறையில் பணியில் இருக்கும் கல்வெட்டியல் அலுவலர் ஆகியோர் மைசூரில் உள்ள கல்வெட்டியல் மையத்திற்கு சென்று அங்கு தமிழ் கல்வெட்டுக்கள் அனைத்தும் முறையாக படிமம் எடுக்கப்பட்டுள்ளதா? பாதுகாக்கப்பட்டுள்ளதா? முறையாக வரிசை எண்கள் அளித்து பராமரிக்கப்படுகிறதா? அவற்றில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா? எத்தனை கல்வெட்டுகள் உள்ளன? அவை எவ்வாறு பராமரிக்கப் படுகின்றன? என்பது தொடர்பாக ஆய்வு செய்து ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com