தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை : அமர்நாத்தில் சோகம்..

தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை : அமர்நாத்தில் சோகம்..
தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை : அமர்நாத்தில் சோகம்..

அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்டார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர், காசிம்வயல் பகுதியை சேர்ந்தவர் துணை ராணுவ படை வீரர் ராம்குமார் (33). இவர் ஜம்மு கஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்று பணியிலிருந்த அவர் இயந்திர துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த தகவல் மாலை 3 மணியளவில் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com