தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கும் தெற்கு ரயில்வே: எந்த ஊருக்கு?

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கும் தெற்கு ரயில்வே: எந்த ஊருக்கு?

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கும் தெற்கு ரயில்வே: எந்த ஊருக்கு?
Published on

தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காக தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் -நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் ஏப்ரல் 13ம் தேதி புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.35 மணிக்கு மதுரை வந்து சேரும். பின்னர், மதுரையிலிருந்து அதிகாலை 05.40 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 17ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு இரவு 09.00 மணிக்கு மதுரை வந்து சேரும். மதுரையிலிருந்து இரவு 09.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 காப்பாளர் பெட்டியுடன் இணைந்த மாற்றுத் திறனாளிகள் பெட்டிகள் இணைக்கப்படும் என மதுரைக்கோட்ட தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com