திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்காக புதிய அங்காடி திறக்கப்பட்டுள்ளது.
சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் இந்த அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்படும் என சிறைத்துறை கூடுதல் இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்தார். இதன் மூலம் 80 சிறைவாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் 776 கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.