வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - அணையிலிருந்து 5,090கன அடி உபரிநீர் திறப்பு

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - அணையிலிருந்து 5,090கன அடி உபரிநீர் திறப்பு
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - அணையிலிருந்து 5,090கன அடி உபரிநீர் திறப்பு

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 3,745கன அடியிலிருந்து 5,090கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியார் அணையின் நீர்மட்டம் 142அடியை எட்டியதால், அணையிலிருந்து தமிழகத்திற்கு 1,344 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 3,545கன அடியாக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 71அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 70.11அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 5,855 மில்லியன் கன அடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com