ஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் ஆணை

ஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் ஆணை
ஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் ஆணை

சிலைக்கடத்தல் வழக்கு குறித்த ஆவணங்களை ஒரு வாரத்தில் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டதால், வழக்கு ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி அவர் ஆவணங்களை அளிக்காததால், தமிழ்நாடு அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவணங்களை தந்து விடுவதாகக் கூறிய பிறகும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருப்பதாக பொன் மாணிக்கவேல் தரப்பில் முறையிடப்பட்டது. ஓய்வுபெற்ற அதிகாரி அரசு ஆவணங்களை ஒரு நாள் வைத்திருப்பது கூட சட்டவிரோதம் என்று அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

இதையடுத்து, பொன் மாணிக்கவேல் ஒரு வாரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, அதுகுறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com