இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி மற்றும் ஹரிஷிகேஷ் ராய் முன் விசாரிக்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றனவா, இல்லையா என வினவிய நீதிபதிகள், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.