8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளது - உச்சநீதிமன்றம் 

8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளது - உச்சநீதிமன்றம் 

8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளது - உச்சநீதிமன்றம் 
Published on

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு தரப்பினர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு தொடுத்துள்ள இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளது. 

குறிப்பாக நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் என்னென்ன? விரிவான திட்டம் தீட்டப்பட்டதா? சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? அனுமதி பெறாமல் எப்படி நிலத்தை கையகப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறீர்கள், சுற்று சூழல் அனுமதி பெற எவ்வளவு காலம் ஆகும். அவசியமான திட்டம் என்கிறீர்கள், ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தாமதம் ஆகும் என்கிறீர்கள். இதை நாங்கள் குழப்பமாகவே பார்க்க வேண்டியுள்ளது. என நீதிபதிகள் கருத்துகளை தெரிவித்தனர். மேலும் செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com