”ஒற்றைத் தலைமை வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்”.. - இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

”ஒற்றைத் தலைமை வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்”.. - இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

”ஒற்றைத் தலைமை வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்”.. - இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி
Published on

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டதால் இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கை தீர்ப்புக்காக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை தீர்ப்பளித்தனர். அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தும், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது இபிஎஸ் தரப்புக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதையடுத்து இபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தீர்ப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை, “நாங்கள் எடுத்து வைத்த ஒற்றை தலைமை என்ற வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதிமுகவின் சட்ட விதிகளின்படி பொதுக்குழு நடந்துள்ளது என்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com