தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை(23.01.2022) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு நாட்களில் தேவையின்றி, பொதுமக்கள் வெளியில் சுற்ற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2 வாரங்களிலும் இதே நிலை நிடித்த நிலையில், இந்த வார ஞாயிற்றுக்கிழமையும் தமிழகத்தில் முழு ஊரடங்கு (23.01.2022) அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. வெளியூர்களிலிருந்து வருபவர்கள் தங்கள் இல்லங்களுக்கு செல்லும் வகையில், ஆட்டோக்கள், கால்டேசிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com