சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் வெயில் அதிகரிக்கும்: வானிலை மையம்

சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் வெயில் அதிகரிக்கும்: வானிலை மையம்

சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் வெயில் அதிகரிக்கும்: வானிலை மையம்

சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் முதல் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com