திடீரென நிறுத்தப்பட்ட லாரி மீது அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - விபத்தில் ஒருவர் உயரிழப்பு

திடீரென நிறுத்தப்பட்ட லாரி மீது அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - விபத்தில் ஒருவர் உயரிழப்பு
திடீரென நிறுத்தப்பட்ட லாரி மீது அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - விபத்தில் ஒருவர் உயரிழப்பு

ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிறுத்தப்பட்ட லாரியின் மீழுது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை கொல்லப்பள்ளி என்னுமிடத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த இரண்டு லாரிகள், இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்..

இதையடுத்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்; மூலமாக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனால் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த மனோ என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com