சுபஸ்ரீ வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் பெயர் எஃப்ஐஆரில் சேர்ப்பு

சுபஸ்ரீ வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் பெயர் எஃப்ஐஆரில் சேர்ப்பு
சுபஸ்ரீ வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் பெயர் எஃப்ஐஆரில் சேர்ப்பு

பேனர் விழுந்து, சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னைப் பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி ஓட்டுநர் மற்றும் பேனர் வைத்தவர் எனப் பொதுவாகக் குறிப்பிட்டு 279, 336, 304(A) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே பேனர் வைத்தவர் பெயரை வழக்கில் ஏன் சேர்க்கவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயரும் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அனைத்து தரப்பு சாட்களிடமும் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். பேனர்கள் அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைத்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com