தேவா் ஆட்டம் ஆடி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்..!

தேவா் ஆட்டம் ஆடி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்..!
தேவா் ஆட்டம் ஆடி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்..!

திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் தேவா் ஆட்டம் ஆடி தொடர்ந்து 2 ஆம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உடுமலைபகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் 1000 க்கும் மேற்பட்டோர் 2 ஆம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இனிமேலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்காமல் இருந்தால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி தமிழர் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

தமிழா்களின் பாரம்பரியம், பண்பாடு பற்றி பேச பீட்டாவிற்கு தகுதியில்லை என கூறிய மாணவர்கள், மத்திய மாநில அரசுகள் நாடகம் நடத்தாமல் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் எனக் கூறும் மாணவிகள் தேவா் ஆட்டம் ஆடி போராட்டத்தை தொடா்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com