பேருந்து கட்டண உயர்வு: தொடரும் மாணவர்களின் போராட்டம்

பேருந்து கட்டண உயர்வு: தொடரும் மாணவர்களின் போராட்டம்

பேருந்து கட்டண உயர்வு: தொடரும் மாணவர்களின் போராட்டம்
Published on

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது.

தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் சராசரியாக 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு கடந்த 20-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிய அளவில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது. பேருந்து கட்டண உயர்வுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி வேலூரில் மாணவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படாததால் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்றும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது. பேருந்து கட்டணத்தை திரும்பபெற வலியுறுத்தி தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து வாயில் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல நாகைமாவட்டம் மயிலாடுதுறையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மன்னம்பந்தல் தனியார் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com