மாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை: விழுப்புரத்தில் மூவர் கைது

மாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை: விழுப்புரத்தில் மூவர் கைது

மாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை: விழுப்புரத்தில் மூவர் கைது
Published on

விழுப்புரத்தில் பள்ளி மாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, போக்சோ சட்டத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள நரேஷ் என்பவர், சிறுமியுடன் நட்பாக பழகி வந்தார். டியூஷனுக்குச் சென்ற சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நரேஷ், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு நண்பர்கள் ராஜா, சூர்யா ஆகியோருடன் சேர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், மூவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி, போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவலர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com