பாலியல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை? - ஆசிரியர் மீது பெற்றோர் புகார்

பாலியல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை? - ஆசிரியர் மீது பெற்றோர் புகார்

பாலியல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை? - ஆசிரியர் மீது பெற்றோர் புகார்
Published on

கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவையிலுள்ள தனியார் பள்ளியொன்றில் 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவியொருவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை எனக்கூறி மாற்றுச் சான்றிதழ் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முயன்று வந்த நிலையில், மாணவி வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த உக்கடம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே மாணவி பயின்ற பள்ளியின் ஆசிரியர் ஒருவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் அவரிடமிருந்து தப்பவே மாணவி பள்ளியில் இருந்து விலகியதாகவும், இருப்பினும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவி எழுதி வைத்திருந்ததாக கூறப்படும் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ள போலீசார், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com