\
நீட்டை ரத்து செய்யக் கோரி போராட்டம்: மாணவர்கள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு

நீட்டை ரத்து செய்யக் கோரி போராட்டம்: மாணவர்கள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு

நீட்டை ரத்து செய்யக் கோரி போராட்டம்: மாணவர்கள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு
Published on

தஞ்சையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நீட் தேர்வை எதிர்த்து மாணவ அமைப்பினர் பல இடங்களில் போராடிவரும் நிலையில், இன்று காலை தஞ்சையில் மாணவ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்னர் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டு போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அவர்கள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில மாணவர்களின் சட்டை கிழிந்தது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com