இர்மாவை போன்ற புயல் சென்னையை தாக்கும்? - எச்சரிக்கும் ஆய்வு

இர்மாவை போன்ற புயல் சென்னையை தாக்கும்? - எச்சரிக்கும் ஆய்வு

இர்மாவை போன்ற புயல் சென்னையை தாக்கும்? - எச்சரிக்கும் ஆய்வு
Published on

அமெரிக்காவை அண்மையில் மிரட்டிய இர்மா போன்றதொரு புயல் சென்னையிலும் வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது. 

மெட்ராஸ் ஐ.ஐ.டி. மற்றும் இரு அமைப்புகளும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 30 ஆண்டுகளில் சென்னையை ஒட்டிய கடற்பகுதியின் நீர் மட்டம் இரண்டரை மீட்டர் அதிகரித்து 6.85 மீட்டரை தொடும் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவர் என அதில் கூறப்பட்டுள்ளது. எனவே இதற்கேற்ப மாநில அரசு உஷாராக இருக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் ஒருங்கிணைந்த கடலோர பகுதி மேலாண்மை திட்டத்தை தமிழகத்திலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது. கடல் நீர் மட்டம் உயர்வதால் அமெரிக்காவை மிரட்டிய இர்மா போன்றதொரு புயல் சென்னையையும் தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com