போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்: சிவசேனாபதி

போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்: சிவசேனாபதி

போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்: சிவசேனாபதி
Published on

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் மூலம் தடை நீங்கி விட்டதால், போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு போராட்டத்தை ஒருங்கிணைத்த கார்த்திகேய சிவசேனாபதி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசின் அறிவுரையின் பேரில் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கி அவசர சட்டம் வந்திருக்கிறது. இது தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ள அவர், இதை நமது ஒற்றுமையின் முதல் படியாகக் கொண்டு சட்டரீதியாகவும், நாடாளுமன்ற ரீதியாகவும் நீண்ட கால நிரந்தர தீர்வுகளுக்கு பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வரும் வாரங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதி அளித்திருப்பதாகவும் சேனாபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதமர், தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது குடிமக்களாகிய நமது கடமை என்று கூறியுள்ள அவர், போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இது போன்ற ஒற்றுமை அவசியம் என்றாலும், இப்போதைக்கு ஜல்லிக்கட்டு தவிர்த்து வேறு பிரச்னைகளுக்கு போராட்டத்தை திசை திருப்ப வேண்டாம் என்றும் கார்த்திகேய சேனாபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com