பேச்சுவார்த்தைக்கு சென்ற தேனி எஸ்.பி. மீது கல்வீச்சு... போலீசார் குவிப்பு..!

பேச்சுவார்த்தைக்கு சென்ற தேனி எஸ்.பி. மீது கல்வீச்சு... போலீசார் குவிப்பு..!

பேச்சுவார்த்தைக்கு சென்ற தேனி எஸ்.பி. மீது கல்வீச்சு... போலீசார் குவிப்பு..!
Published on

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தைக்கு சென்ற தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது ‌கல்வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சருத்திபட்டியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவர், பொம்மிநாயக்கன்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த சிரஞ்சீவி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி சருத்திபட்டியைச் சேர்ந்த மக்கள் நேற்றிரவு சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் காவலர்கள், போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக கற்களை வீசி தாக்கியது. உடனடியாக போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தாக்குதலில் எஸ்.பி பாஸ்கரனுக்கு இடது கண் அருகில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, சருத்திபட்டி ஊருக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com