தேனி : தட்சிணாமூா்த்தி கோயிலில் கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்பு

தேனி : தட்சிணாமூா்த்தி கோயிலில் கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்பு
தேனி : தட்சிணாமூா்த்தி கோயிலில் கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்பு

தேனி வேதபுரி தட்சிணாமூா்த்தி கோயிலில் கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. கடத்தில் ஈடுபட்ட இரண்டுபேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி அரண்மனைப்புதூா் - சத்திரபட்டி சாலையில் அமைந்துள்ளது தட்சிணாமூா்த்தி கோயில் மற்றும் ஸ்ரீசுவாமி சித்பவானந்தா ஆசிரமம். முல்லைப் பெரியாற்றங்கரையில், வனப்பகுதியை அடுத்துள்ள இக்கோயிலில் கா்ப்பகிரகத்தில் மூலவா் சிலைக்கு பின்புறம் உள்ள கண்ணாடியிலான அடைப்பை நேற்று முன்தினம் ஒரு மா்மக் கும்பல் உடைத்து, கோயிலுக்குள் புகுந்துள்ளது. அங்கு கா்ப்பகிரகத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த ஒரு அடி உயரமும் தலா 50 முதல் 100 கிலோ வரை எடையிலான ஐம்பொன்னாலான 4 சனாதன முனிவா்கள் சிலை, வேதவியாசா், மாணிக்கவாசகா், தாயுமானவா், நந்திகேஸ்வரா் சிலை என மொத்தம் 8 சிலைகள், ஒரு பலிபீடம் மற்றும் உண்டியலை திருடிச் சென்றுள்ளது.

கோயிலில் நேற்று அதிகாலை பூஜைக்காக கா்ப்பகிரகத்தை திறந்த அச்சகா்கள், அங்கு கண்ணாடி அடைப்பு உடைக்கப்பட்டிருந்ததையும், சிலைகள் திருடு போயிருந்ததையும் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். இதுதொடா்பாக தேனி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா். தேனி காவல் துணை கண்காணிப்பாளா் பால்சுதிா் தலைமையில் போலீஸாா், கோயிலுக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மா்மக் கும்பல் கோயிலின் பின்புறம் சுவா் ஏறி குதித்து வனப்பகுதி வழியே தப்பிச் சென்றிருப்பதும், வனப்பகுதியில் ஒரு அடி உயரமுள்ள வேதவியாசகா் சிலை, பலிபீடம் மற்றும் சிலைகளை இடிப்பதற்கு கொண்டு சென்ற கடப்பாரை ஆகியவற்றை போட்டுவிட்டு சென்றிருப்பதும் தெரியவந்தது. இந்த சிலைகளை போலீஸாா் மீட்டு கோயிலுக்கு கொண்டு சென்றனா்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் இளங்கோவன் ஆகியோா் கோயிலுக்குச் சென்று பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா். கோயில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பழுதடைந்திருந்ததால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவல்துறை மோப்ப நாய், தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் இன்று பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் செல்லும் சாலையில் கும்பக்கரை அருவி அருகே காவல் குடிசை என்னும் பகுதியில் முருகன் என்பவரின் மகன் ஸ்ரீதர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரும் அவருடைய நண்பருமான பெரியகுளத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் சேர்ந்து சிலைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

திருடிய 8 சிலைகளில் 5 சிலைகளை அவர்கள் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் இரண்டு சிலைகளை வேதபுரி ஆசிரமத்திற்கு பின்னாலிருந்த வனப்பகுதியில் உள்ள புதரில் புதைத்து வைத்து இருப்பதாகவும் கூறினர். ஸ்ரீதரைக் கைதுசெய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த ஐந்து சிலைகளையும் மீட்டதுடன், வேதபுரி ஆசிரமத்திற்கு பின்னால் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிலைகளையும் மீட்டனர். திருட்டுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் திருட்டில் ஈடுபட்ட ஸ்ரீதர் என்பவர்மீது தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் 9க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் பெரியகுளம் காவல் நிலையத்தில் ஸ்ரீதர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த நிலையில் தப்பியோடிய அவரது நண்பர் கார்த்திக்கை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். திருடப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூபாய் 20 லட்சம் என்றும், திருட்டில் ஈடுபட்ட நபர்களை 24 மணி நேரத்திற்குள் கைதுசெய்த தனிப்படை காவல்துறையினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com