"அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கவும்" - கல்லூரி கல்வி இயக்ககம்

"அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கவும்" - கல்லூரி கல்வி இயக்ககம்
"அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கவும்" - கல்லூரி கல்வி இயக்ககம்

தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, கலந்தாய்வை, ஆகஸ்ட் 23 ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 3 ம் தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் அல்லது நேரடி கலந்தாய்வு நடைபெறலாம் என வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

+2 மதிப்பெண் சான்றிதழ், இதர சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் எனவும் , சேர்க்கையின்போது வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டையும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com